சினிமா செய்திகள்
null

75-வது சுதந்திர தினத்தில் புதிய முயற்சி

Published On 2022-07-17 11:00 GMT   |   Update On 2022-07-17 11:02 GMT
  • இந்திய சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
  • இதில் 75 பாடகர்களை ஒரே மேடையில் இணைக்கவுள்ளனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை ஜே.ஆர்-7 மற்றும் சாதகப் பறவைகள் இணைந்து, ஒரு இசைத் திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. இது குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதில், முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாக கொண்டாட உள்ளனர். இதன் மூலம் யூனைடட் சிங்கர்ஸ் சேரிட்டபள் டிரஸ்ட் அமைப்பிற்கு நிதி திரட்டவுள்ளனர். 75 முக்கிய பிரமுகர்களை இணைத்து இதில் பங்குப்பெற வைக்கவுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதையும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நீண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News