சினிமா செய்திகள்

பிரியாமணி படத்துக்கு தடை... ஏன் தெரியுமா?

Published On 2024-02-28 06:17 GMT   |   Update On 2024-02-28 06:17 GMT
  • ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.
  • ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கவுதம் நடித்துள்ள ஆர்ட்டிக்கிள் 370 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி இருந்தார்.

ஆர்டிக்கிள் 370 படத்தை குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திரையிட படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்குள்ள தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதித்தனர்.

வளைகுடா நாடுகள் தடை காரணமாக அங்கு வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ட்டிக்கிள் 370 படத்தை பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரதமர் பாராட்டிய படத்துக்கு வளைகுடா நாடுகள் தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.

Tags:    

Similar News