சினிமா செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டு

Published On 2025-05-07 18:35 IST   |   Update On 2025-05-07 18:35:00 IST
  • பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
  • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்,"மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News