நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்" என்ற செய்தி இருக்கிறது. இதை பார்த்து தற்கொலை முயற்சியை கைவிடுகிறார்.
பின்னர் அந்த பெண் யார் என்பதை தேடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா? இல்லையா? மெசேஜ் அனுப்பியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஶ்ரீராம் கார்த்திக், தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார். அந்த பெண் யார் என்ற தேடுதலும், காதலிப்பதும் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக லிப் லாக் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
நாம் நிறைய காதல் படங்களை பார்த்து இருப்போம். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. யாரும் சிந்திக்காத கதையை, தனது கற்பனை கலந்து திகில் மற்றும் ஃபேண்டஸி படமாக கொடுத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் பால கணேசன் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
படத்தொகுப்பு
இயக்குனரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்தின் பணியும் பாராட்டும்படி உள்ளது.