சினிமா செய்திகள்
null

காந்தாரா சர்ச்சை: ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கத் வேண்டாம் - கர்நாடக உயர்நீதிமன்றம்

Published On 2026-02-24 15:17 IST   |   Update On 2026-02-24 15:17:00 IST
பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா சாப்டர்-1 பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் புகழ் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார்.

இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங்கிற்கு எதிராக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், ரன்வீர் சிங்கிற்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags:    

Similar News