சினிமா செய்திகள்
பாவ்னி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவ்னிக்கு வந்த சோதனை

Published On 2022-01-20 13:03 GMT   |   Update On 2022-01-20 13:03 GMT
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவ்னிக்கு வீட்டில் இருந்து வந்தவுடன் சோதனை வந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் 'ரெட்டை வால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 


கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 



அதில், 'லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்' என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News