சினிமா
சமந்தா

பெற்றோர்களுக்கு அட்வைஸ் சொன்ன சமந்தா

Published On 2021-10-30 12:08 GMT   |   Update On 2021-10-30 12:08 GMT
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமந்தா, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
சமீபத்தில் கணவரை பிரிவதாக அறிவித்த சமந்தா, தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து இருக்கிறார். தான் செல்லும் இடங்களில் இருந்து புகைப்படங்களை செய்து வரும் சமந்தா, சமூக வலைத்தளத்தில் நாக சைதன்யாவோடு இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். அதோடு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் சொல்லியிருக்கிறார்.

அதில் உங்கள் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாகத் தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காகப் பணம் சேர்த்து வைப்பதற்குப் பதிலாக அவளது கல்விக்குச் செலவிடுங்கள்.



முக்கியமாக அவளைத் திருமணத்திற்குத் தயார் செய்வதற்குப் பதிலாக அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.
Tags:    

Similar News