சினிமா
சமந்தா

மானநஷ்ட வழக்கு.... நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு

Published On 2021-10-27 03:52 GMT   |   Update On 2021-10-27 03:56 GMT
வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் தன்னைப்பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமந்தா சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் பாலாஜி மானநஷ்ட வழக்கு மனுவை தாக்கல் செய்தார். 

வலைத்தளங்களில் அவதூறாக செய்திகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிட்டார். 



மேலும் ஏற்கனவே யூ-டியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் நீக்கிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேபோல நடிகை சமந்தாவும் தனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News