சினிமா
நடிகராக தடம் பதித்து வரும் ஜெயம் எஸ்.கே.கோபி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஜெயம் எஸ்.கே.கோபி ஈர்த்துள்ளார்.
திரையரங்கு குத்தகைதாரராக திரையுலகிற்குள் நுழைந்து, விநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் முன்னேறி, நடிகராக வளர்ந்து இருப்பவர் ஜெயம் எஸ்.கே.கோபி. காஞ்சனா 3 மூலம் ராகவா லாரன்ஸால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயம் எஸ்.கே.கோபி, திரௌபதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இவரது நடிப்பு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தகன், ஜகா, கோபி நயனார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்ட சுமார் 10 பத்து படங்களில் ஜெயம் எஸ்.கே.கோபி தற்போது நடித்து வருகிறார். கனவே கலையாதே உள்ளிட்ட மூன்று வலைத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
“ருத்ரதாண்டவம் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து நடிகர் ராதாரவி, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். அனைத்து பெருமையும் இயக்குநர் மோகன் ஜி-யையே சேரும் என்கிறார் ஜெயம் எஸ்.கே.கோபி.