சினிமா
நெடுமுடி வேணு

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

Published On 2021-10-11 14:35 IST   |   Update On 2021-10-11 14:35:00 IST
தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.
பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக கலக்கியிருப்பார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வந்த நெடுமுடி வேணு இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். 

1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார். இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

Similar News