சினிமா
சமந்தா

விவாகரத்துக்கு பின் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சமந்தா

Published On 2021-10-11 05:35 GMT   |   Update On 2021-10-11 05:35 GMT
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அண்மையில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் சமந்தா.


சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர்

அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், நடத்தி வரும் ‘உங்களில் யார் கோடீஸ்வரர்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் ரூ.25 லட்சம் வென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதில் அவர் விவாகரத்து விவகாரம் குறித்து பேசினாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
Tags:    

Similar News