சினிமா
சிம்பு

குடி பழக்கத்தை நிறுத்தி ஒரு வருஷம் ஆச்சு - ஓப்பனாக சொன்ன சிம்பு

Published On 2021-06-22 02:09 GMT   |   Update On 2021-06-22 02:09 GMT
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில், மாநாடு படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய சிம்பு, தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலம் ஆவதாக கூறினார். மேலும் பிரேம்ஜி  போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக பேசினார்.



மாநாடு படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News