சினிமா
பிரசாந்த் நீல்

கே.ஜி.எப் இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Published On 2021-06-09 14:18 GMT   |   Update On 2021-06-09 14:18 GMT
கே.ஜி.எப் என்ற மாஸான படத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
சமீபத்தில் தேசிய அளவில் பேசப்பட்ட படம் கேஜிஎப். யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி லாபத்தை அள்ளியது. கேஜிஎப் இரண்டாம் பாகத்துக்கு இந்தியாவே காத்திருக்கிறது. 

சமீபத்தில் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இதில் யாஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி மாஸாக இருக்கும். 


இயக்குனர் பிரசாந்த் நீல்

சினிமாவில் இப்படி ஹீரோயிசத்தை உச்சத்தில் காட்டியவர், நிஜத்தில், ஊசி போடுவதைக் கூட பார்க்க பயந்து முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பிரசாந்த் நீல் இணையத்தில் பகிர, 100 பேரை அடிக்கிற மாதிரி மாஸ் சீன் வச்ச இயக்குனரா இது என்று கலாய்த்து வருகிறார்கள்.
Tags:    

Similar News