சினிமா
சூர்யா

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. கொண்டாடும் ரசிகர்கள்

Published On 2021-06-09 10:19 GMT   |   Update On 2021-06-09 10:19 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர். ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா சத்தமின்றி வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறார். நேற்று மட்டும் 250 ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



இக்கட்டான நேரத்தில் உதவி செய்யும் வகையில் சூர்யா அனுப்பிய பணம் தங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள்.
Tags:    

Similar News