சினிமா
வெற்றி மாறன்

வெற்றிமாறன் அறிவுரையை ஏற்க மறுத்து விட்டேன் - வருத்தப்படும் இயக்குனர்

Published On 2021-06-08 20:00 IST   |   Update On 2021-06-08 20:00:00 IST
வெற்றிமாறன் ஒரு முறை சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்திக் நரேன். அதனைத் தொடர்ந்து மாபியா என்ற படத்தை இயக்கினார். 

இந்த படத்தை எதனால் எடுத்தேன், என்ன சூழ்நிலை எடுத்தேன் என்பதை பகிர்ந்து கொண்டார். அப்போது, துருவங்கள் பதினாறு வெற்றி பெற்றவுடன் எடுக்கப்பட்ட நரகாசுரன் படம் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றதால் எப்படியாவது ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் என அவசர அவசரமாக மாபியா திரைப்படம் எடுத்தேன். 


வெற்றி மாறன் - கார்த்திக் நரேன்

அந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்னால்தான் வெற்றிமாறன் ஒரு அறிவுரையை கொடுத்திருந்தார். படம் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடக் கூடாது, ஒரு படம் லேட்டானாலும் தரமான படமாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அதை நான் பின்பற்றவில்லை எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார் கார்த்திக் நரேன். 

Similar News