சினிமா
தி பேமிலி மேன் 2 வெப் தொடரின் போஸ்டர்

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை... நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா?

Published On 2021-05-31 08:46 GMT   |   Update On 2021-05-31 08:46 GMT
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது அமைதிக்கான காரணம் வெளியாகி உள்ளது. 


சமந்தா

நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்த தொடரின் தயாரிப்பு நிறுவனம் சமந்தாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். அதனால் தான் அவர் இந்த விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறாராம். 
Tags:    

Similar News