சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் - முக ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

Published On 2021-05-13 16:40 GMT   |   Update On 2021-05-13 16:40 GMT
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

நேற்று நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறார்.
Tags:    

Similar News