சினிமா
ஜிவி பிரகாஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ இசையமைக்கப்போவது ஜி.வி.யா? யுவனா? - செல்வராகவன் விளக்கம்

Published On 2021-03-10 11:50 IST   |   Update On 2021-03-10 19:09:00 IST
தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்தனர்.



இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் செல்வராகவனிடம், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்கு இசையமைக்கப் போவது ஜிவி பிரகாஷா அல்லது யுவன் சங்கர் ராஜாவா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இருவருமே என் நண்பர்கள் தான், இருவரில் யார் பணியாற்ற உள்ளார்கள் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களின் பணிச்சுமையை பொருத்தது என தெரிவித்துள்ளார்.

Similar News