சினிமா
கார்த்திகா

இரு மொழி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் கார்த்திகா

Published On 2021-02-18 15:25 GMT   |   Update On 2021-02-18 15:25 GMT
தமிழில் தூத்துக்குடி என்கிற படம் மூலம் பிரபலமான கார்த்திகா தற்போது இரு மொழி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

குறிப்பாக அந்தப்படத்தின் ‘கருவாப்பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல ‘பிறப்பு’ படத்தில் அவர் ஆடிப்பாடிய, ‘உலக அழகி நான் தான்’ பாடல், அந்த சமயத்தில் பள்ளிக்குழந்தைகளின் மேடை நடனத்துக்கான பொருத்தமான பாடலாக அமைந்தது.



இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி மும்பை சென்றுவிட்ட கார்த்திகா, தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார்.
Tags:    

Similar News