சினிமா
லாஸ்லியா

தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம்

Published On 2021-01-05 10:05 GMT   |   Update On 2021-01-05 10:05 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார்.  

 பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. சமீபத்தில் கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் லாஸ்லியா குடும்பமே சோகத்தில் மூழ்கிப் போனது.



ஒரு மாதம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாஸ்லியா தந்தையின் உடல் சொந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் லாஸ்லியா தந்தையின் மறைவிற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின் நம்பிக்கை என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது come back என்று கூறி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News