சினிமா
மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி
முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் தற்போது பூமி திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடுத்து பூலோகம் பட இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பூலோகம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார்.