சினிமா
செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் - செல்வராகவன்

Published On 2021-01-01 09:42 GMT   |   Update On 2021-01-01 12:34 GMT
தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை எடுக்கும் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 



10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று (டிச.31-ந் தேதி) தமிழகமெங்கும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏராளமான ரசிகர்கள் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்குமாறு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு பதிலளித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News