சினிமா
பிரிஸ்டி பிஸ்வாஸ்

போதை விருந்தில் கலந்துகொள்ள வந்த நடிகை அதிரடி கைது

Published On 2020-12-25 12:29 IST   |   Update On 2020-12-25 19:34:00 IST
கேரளாவில் தனியார் ரிசார்ட்டில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மலையாள சினிமாவில் பார்ட்டி கலாச்சாரம் பரவலாக உள்ளது. இதில் தனியார் ரிசார்ட்டுகளில் நடத்தும் விருந்துகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போதை ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் இரவில் தனியார் ரிசார்ட்டில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பவுடர் உள்பட 7 வகையான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.



இந்த போதை விருந்தில் மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்வதாக இருந்தனர். போலீசாரின் அதிரடி சோதனை குறித்து தகவல் அறிந்து பார்ட்டிக்கு வராமல் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த போதை விருந்திற்கு ஏற்பாடு செய்ததாக தொடுபுழாவை சேர்ந்த அஜிமல் ஜாகீர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகை பிரிஸ்டியும் ஒருவர், இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கன்னட சினிமாவில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணிதிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News