சினிமா
ரகுல் பிரீத் சிங்

சினிமா பிரபலம் புது வீடு பரிசாக கொடுத்தாரா? - உண்மையை சொன்ன ரகுல் பிரீத் சிங்

Published On 2020-12-18 08:01 GMT   |   Update On 2020-12-18 08:01 GMT
நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு சினிமா பிரபலம் ஒருவர் புது வீடு பரிசாக கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களில் நடிக்கிறார். 

சமீபத்தில் போதை பொருள் வழக்கில் போலீசார் சம்மன் அனுப்பி ரகுல்பிரீத் சிங்கை விசாரித்தது பரபரப்பானது. ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். இந்த வீட்டை ஆந்திராவைச் சேர்ந்த சினிமா பிரபலம் பரிசாக அவருக்கு கொடுத்ததாக கிசுகிசுக்கள் வந்தன. 



நடிகை சமந்தா ஓ.டி.டி. தளத்துக்காக நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை பொருட்படுத்துவது இல்லை. ஐதராபாத்தில் நான் வசிக்கும் வீட்டை ஒரு பிரபலம் எனக்கு பரிசாக கொடுத்ததாக தொடர்ந்து வதந்திகள் வருகின்றன. இது பெரிய அபத்தம். வீட்டை யாராவது பரிசாக கொடுப்பார்களா?. நான்தான் அந்த வீட்டை வாங்கினேன். மற்றவர்கள் என்னை பராமரிக்கும் நிலையில் நான் இல்லை” என்றார்.
Tags:    

Similar News