சினிமா
கணவருடன் சித்ரா

சித்ரா தற்கொலை வழக்கு - கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்

Published On 2020-12-17 17:06 GMT   |   Update On 2020-12-17 17:06 GMT
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் ஹோம்நாத் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.



தற்போது ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.
Tags:    

Similar News