சினிமா
அபயா ஹிரன்மயி, கோபி சுந்தர்,

திருமணம் செய்யாமல் பாடகியுடன் வாழும் இசையமைப்பாளர்

Published On 2020-12-17 17:23 IST   |   Update On 2020-12-17 19:21:00 IST
மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர், பாடகியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
மலையாளம், தெலுங்கு படங்களில் பாடி வருபவர் அபயா ஹிரன்மயி. அவர் கோபி சுந்தர் இசையில் தான் அதிகம் பாடியிருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் கோபி சுந்தருக்கும், ப்ரியா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கோபி சுந்தர் தன் மனைவியை பிரிந்துவிட்டார். 



இந்நிலையில் கோபி சுந்தரும், அபயாவும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக அபயாவுடன் இருப்பதாக கோபி சுந்தர் தெரிவித்தார். கோபி சுந்தருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது குறித்து அபயா சமீபத்தில் தான் மனம் திறந்து பேசினார். அதில் இருந்து கோபி சுந்தருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

Similar News