சினிமா
கமல்

‘பிக்பாஸ் 4’ - எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா?

Published On 2020-11-23 08:48 GMT   |   Update On 2020-11-23 08:48 GMT
‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ளதால், இனி வரும் வாரங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 50 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், வீட்டினுள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். வழக்கமாக இறுதி வாரத்தில் நான்கு பேர் மட்டுமே வீட்டினுள் இருப்பர். 

ஆனால் தற்போதுள்ள நிலையில் வாரத்துக்கு ஒருவரை வெளியேற்றினால் அந்த எண்ணிக்கையை அடைய முடியாது. நேற்றைய எபிசோடின் இறுதியில் இதுபற்றி பேசிய கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சூசகமாக கூறிவிட்டு சென்றார். 

ஆதலால் இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்காக சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் தேர்வாகி உள்ளனர்.  இவர்களில் குறைவான வாக்குகளை பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News