சினிமா
விஜய் சேதுபதி

சி.எஸ்.கே - எஸ்.ஆர்.ஹெச் போட்டிக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள்.... ஏன் தெரியுமா?

Published On 2020-10-13 07:03 GMT   |   Update On 2020-10-13 07:29 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டிக்காக விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்களாம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இன்று வெளியிடுகிறார்கள். இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டிக்கு முன் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார்கள். இதனை காண விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



800 படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறார்களாம். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட உள்ளனர்.
Tags:    

Similar News