சினிமா
சதீஷ்

என் வாழ்வில் இந்த தவறை செய்யமாட்டேன் - நடிகர் சதீஷ்

Published On 2020-10-12 09:34 GMT   |   Update On 2020-10-12 09:34 GMT
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நகைச்சுவை நடிகர் சதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி ஆலோசனை கூட்டத்தின்போது கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில் இதுதொடர்பாக நகைச்சுவை நடிகர் சதீஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News