சினிமா
யோகி பாபு

அவர் சொன்ன அட்வைஸைத்தான் கடைபிடித்து வருகிறேன் - யோகி பாபு

Published On 2020-10-03 08:30 GMT   |   Update On 2020-10-03 08:30 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, இப்போவரைக்கும் அவர் சொன்ன அட்வைஸைத்தான் கடைபிடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு மூத்த காமெடி நடிகர்கள் பற்றி கூறியிருப்பதாவது, `எல்லாரையும் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர்களும் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்காங்க. குறிப்பா, கவுண்டமணி சார் சொன்ன ஒரு அறிவுரையைத்தான் இப்போவரைக்கும் கடைபிடித்து வருகிறேன். 

முதல்முறை அவரை சந்தித்தபோது, 'தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்'னு சொன்னார். 



இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன். அதே மாதிரி, வடிவேலு அண்ணனும் 'கோலமாவு கோகிலா' படம் பார்த்துட்டு என்னை ஆபீசுக்கு வரச்சொன்னார். அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். விவேக் சாரும் `கோலமாவு கோகிலா' படம் பார்த்ததுக்கு அப்புறம் கூப்பிட்டுப் பேசினார். அவரோடு 'பிகில்', 'அரண்மனை - 3' படத்துல நடிச்சிருக்கேன். சந்தானமும் சூரியும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News