சினிமா
சிவகார்த்திகேயன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

குரல் அரசனே உறங்குங்கள்.... கண்ணீருடன் விடை தருகிறோம் - சிவகார்த்திகேயன் இரங்கல்

Published On 2020-09-25 11:54 GMT   |   Update On 2020-09-25 11:54 GMT
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: "இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும். கண்ணீருடன் விடை தருகிறோம். எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்" என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News