சினிமா
எஸ்.பி. பாலசுப்ரமணியம், சாவித்ரி

ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி

Published On 2020-09-06 11:28 GMT   |   Update On 2020-09-06 11:28 GMT
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நேற்று எஸ்.பி.பி. - சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.யூ.வில் வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. - சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது. 
Tags:    

Similar News