சினிமா
நீங்கள் ஒரு போராளி... எஸ்.பி.பி.க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் - பிரபல நடிகர் உருக்கம்
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பிரபல நடிகர் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை மூலமாகவும் மற்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிரபல நடிகரான அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனிமேல் ஒருத்தர் பிறந்து வந்தாலும் இவரைப் போல் யாரும் சாதிக்க முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே யாரும் சாதிக்க முடியாது. அவர் தான் நம்ம எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிரார்த்தனையை விட எதுவும் சிறந்தது கிடையாது. தற்போது இவருக்காக கோடிக்கணக்கான பேர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
எஸ்பிபி சார் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் ஒரு போராளி.. - அர்ஜுன்#SPBalasubrahmanyam#SPB#Arjun@akarjunofficialpic.twitter.com/NG3v20LdSt
— Maalai Malar News (@maalaimalar) August 26, 2020
கூடிய சீக்கிரம் உடல் நலம் ஆரோக்கியத்துடன் அவர் வருவார் என்று நானும் வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும் நீங்கள் ஒரு போராளி என்று. உங்களுடைய புதிய பாட்டை கேட்க ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.