சினிமா
நித்யானந்தா, மீரா மிதுன்

கைலாசாவுக்கு செல்ல விரும்பும் மீரா மிதுன்

Published On 2020-08-26 09:31 GMT   |   Update On 2020-08-26 09:31 GMT
நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு செல்ல விரும்புவதாக நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், அவரது உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 



இந்நிலையில், அண்மையில் கைலாச நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவை பாராட்டி, மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அனைவரும் அவரை கேலி செய்தார்கள், அனைவரும் அவரை தவறாக பேசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் அவரோ கைலாசா எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News