சினிமா
விவேக் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிரார்த்தனைக்கு சக்தி உண்டு... எஸ்.பி.பி.க்காக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்

Published On 2020-08-19 14:55 GMT   |   Update On 2020-08-19 14:55 GMT
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற்று வர ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். இதை வரவேற்கும் விதமாக பலரும் நாளை மாலை 6.00 மணிக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.



தற்போது நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவும் உலகத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் ஒரே காரியத்திற்காக வேண்டும் போது அதன் சக்தியே தனி. அந்த சக்தி மூலமாக பலர் மீண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறது. அதனால் நம்ம எஸ்.பி.பி.க்காக நாளை மாலை 6 மணிக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வீடியோவில் கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News