சினிமா
அமலாபால் புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சிந்து சமவெளி சர்ச்சை படத்தில் அறிமுகமாகி பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்த அமலாபால் திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாகி மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர வைத்தார்.
தற்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது.
தற்போது புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதில் “எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை.” என்றெல்லாம் தத்துவ பதிவையும் வெளியிட்டுள்ளார். புகைப்புடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.