சினிமா
பாலா, விஜய்

“தலைவனையும்... மாஸ்டர் படத்தையும் பார்க்காமலே போறேன்” - டுவிட் செய்துவிட்டு விஜய் ரசிகர் தற்கொலை

Published On 2020-08-14 07:55 GMT   |   Update On 2020-08-14 07:55 GMT
விஜய்யின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பாலா என்ற விஜய் ரசிகர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அறிந்த விஜய் ரசிகர்களும், நடிகர்கள் சாந்தனு மற்றும் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், பாலா குடும்பத்துக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட பாலா, கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும் பார்க்காமலே போறேன்” என்று கண்ணீர் விடும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.



அந்த டுவிட்டில் நடிகர் விஜய்யை டேக் செய்து லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட பாலாவுக்கு வயது 21. ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர். அவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பாலா தற்கொலை செய்து கொண்டதையடுத்து #RIPBala என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News