சினிமா
சஞ்சய் தத்

சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால் ‘கே.ஜி.எப் 2’ படத்துக்கு சிக்கல்

Published On 2020-08-14 06:59 GMT   |   Update On 2020-08-14 06:59 GMT
சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எப்' . யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின்  2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும், 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளது. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் ஒன்று. தற்போது சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சைக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக அறிவித்துள்ளதால், கே.ஜி.எப் 2 படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



சஞ்சய் தத் சிகிச்சை முடிந்து வரும் வரை படக்குழு காத்திருப்பார்களா அல்லது டூப் வைத்து சண்டை காட்சிகளை படமாக்குவார்களா என்பது விரைவில் தெரியவரும். இதனால் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 23-ந் தேதி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Tags:    

Similar News