சினிமா
ரோபோ சங்கர்

கொரோனா நோயாளிகளை சந்தோஷப் படுத்திய ரோபோ சங்கர்

Published On 2020-08-12 12:58 GMT   |   Update On 2020-08-12 12:58 GMT
பட்டுக்கோட்டையில், கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க நடிகர் ரோபோ சங்கர் மிமிக்ரி செய்து அசத்தினார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பகுதியில் இதுவரை 450-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை நகர பகுதிகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அனுமதியின் பேரில் பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு மன அழுத்தம் போக்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், திண்டுக்கல் சங்கர் ஆகியோர் பங்கேற்று ‘மிமிக்ரி’ செய்து நோயாளிகளை மகிழ்வித்தனர்.



நிகழ்ச்சியை தொடர்ந்து ரோபோ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கக்கூடாது. அவர்களுடன் அன்போடு பேசி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனது சொந்த செலவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி மகிழ்ச்சியூட்டி வருகிறேன். தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சிபடுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News