சினிமா
பிகே முத்துசாமி

பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்

Published On 2020-08-11 08:03 GMT   |   Update On 2020-08-11 08:03 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.

'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற திரைப்படத்தில் 'மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?' என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றார். ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதை தொகுப்புகளையும் .பி.கே. முத்துசாமி இயற்றியுள்ளார்.

இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பி.கே. முத்துசாமி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News