சினிமா
உதவிப் பொருட்களை வழங்கும் நடிகர் சரண் செல்வம்

நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம் - சரண் செல்வம்

Published On 2020-08-08 10:46 GMT   |   Update On 2020-08-08 10:46 GMT
கொரோனா ஊரடங்கில் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், நடிகர் சரண் செல்வம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம் என்று கூறியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கில் பலதரப்பட்ட மக்களும் வேலைவாய்ப்பின்றி பொருளாதார சிக்கலில் இருந்துவரும் வேளையில், சினிமா தொழிலாளர்கள் நிலைமையும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், துணை நடிகர்கர்கள் என்று பலரும் வேலையின்றி இருக்கின்றனர். பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சரண் செல்வம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலருக்கும் உதவி வருகிறார். உணவுப்பொருட்கள், உள்ளிட்டவைகள் தொடர்ந்து உதவிவரும் நிலையில் சினிமா நடிகர் நடிகைகள் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார். ஊரடங்கு தொடரும் பட்சத்தில் சினிமா தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது அவசியமாகிறது. 



அடிப்படை உணவு பொருட்களுக்குக்கூட சிரமப்படும் தொழிலாளர்கள் பலர் இருந்தாலும் எவரிடமும் சென்று உதவி கேட்பதில் தயக்கம் இருக்கும். அப்படி தயக்கத்திலிருப்பவர்களுக்கு நானாக சென்று உதவிவருகிறேன். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம் என்கிறார் சரண் செல்வம்.

சரண் செல்வம் தமிழில் அகம்புறம், திருட்டு ரயில், அதித்யாயம், காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Tags:    

Similar News