சினிமா
சிவகார்த்திகேயன்

தாத்தா கனவுல வந்து அடிப்பாரு... சிவகார்த்திகேயன்

Published On 2020-07-17 15:14 GMT   |   Update On 2020-07-17 15:14 GMT
செல்லம்மா என்ற பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் தாத்தா கனவுல வந்து அடிப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ’டாக்டர்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘செல்லம்மா’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து உள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் என்ற பாடலை பாராட்டி வருகின்றனர்.



 இந்த நிலையில் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இந்த பாடல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சிவகார்த்திகேயன்! கவிஞரே பயங்கர பார்முல இருக்கீங்க போல! செம கேட்சி சாங் அனிருத்! அராஜகம் பண்றிங்க நெல்சன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆதவ் கண்ணதாசனின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், ‘தயவு செய்து என்னை கவிஞர்ன்னு எல்லாம் சொல்லாதீங்க. தாத்தா கனவுல வந்து உங்கள அடிப்பாங்க’ என்று கூறியுள்ளார். இந்த காமெடி ட்வீட்டுகள் தற்போது வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News