சினிமா
சமந்தா

கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவுக்கு சவால் விட்ட சமந்தா

Published On 2020-07-13 15:48 GMT   |   Update On 2020-07-13 15:48 GMT
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு சவால் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.

தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம் நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அவரது சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.



தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருக்கிறார் சமந்தா.
Tags:    

Similar News