சினிமா
ஆர்.கே.செல்வமணி

சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது எப்போது? - ஆர்.கே.செல்வமணி விளக்கம்

Published On 2020-07-02 07:00 GMT   |   Update On 2020-07-02 07:00 GMT
சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து பெப்சி அமைப்பு தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: ‘’சின்னத்திரை படப்பிடிப்புகளை எப்போது தொடங்கலாம் என்று தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் போன் செய்து விசாரித்தனர். வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பழைய தளர்வுகள் நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது.

நான் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் பேசினேன். அவர் 6-ந்தேதிக்கு பிறகு புதிய அனுமதி வாங்க வேண்டி இருக்காது. ஏற்கனவே அளித்துள்ள அனுமதியின்படியே படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றார். மீண்டும் முதல்வரையோ அமைச்சரையோ பார்த்து அனுமதி வாங்க வேண்டி இருக்குமா? இல்லை இதே அனுமதியோடு படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டேன். 



அவர் 6ந்தேதிக்கு பிறகு பழைய நடைமுறையே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவே புதிய அனுமதி தேவை இருக்காது. ஒருவேளை தேவைப்பட்டால் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றார். ஒன்றிரண்டு நாட்கள் காத்திருந்து நிலைமையை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றும் தெரிவித்தார். 

வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பழைய நடைமுறையே இருக்கும் என்பதால் 8-ந்தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க நாம் தயாராகலாம். ஓரிரு நாளில் இதனை உறுதிப்படுத்தி சொல்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.
Tags:    

Similar News