சினிமா
சேரன்

இதைச் செய்தால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் - அரசுக்கு ஐடியா கொடுக்கும் சேரன்

Published On 2020-06-19 09:32 GMT   |   Update On 2020-06-19 09:32 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து டைரக்டர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “15 நாட்களில் முடிந்து விடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தயங்கியவர் நிறைய. இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டி உள்ளது. 

அவர்களுக்கும் அதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சென்னையில் கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரி செய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.



மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்கள் உயிரோடு வைத்துக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News