சினிமா
பிரியா வாரியர்

ரொம்ப போர் அடிச்சிருச்சு - பிரியா வாரியர்

Published On 2020-06-08 12:15 GMT   |   Update On 2020-06-08 11:01 GMT
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர், ரொம்ப போர் அடிச்சிருச்சு என்று பேட்டி அளித்துள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ’நான் முழு நேர நடிகையாகிட்டேன். ஆனா, இப்பவும் எங்கே போனாலும் கண் அடித்து காட்டச்சொல்லி கேட்கிறார்கள். எனக்கு இது ரொம்ப போர் அடிச்சிருச்சு. அதனால யார் கேட்டாலும் இதைச் செய்றதை நிறுத்திவிட்டேன். 



ஏன்னா, நான் ஒரு நடிகை. என்கிட்ட நடிப்பை எதிர்பார்த்தா சரியா இருக்கும்னு நினைக்குறேன். நான் தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சு நல்ல நடிகைன்னு பேர் வாங்க ஆசைப்படுகிறேன். என்னை நடிக்க விடுங்கள். சின்ன வயசுல இருந்து நடிகையாகணும்னு ஆசைப்பட்டவ நான். மலையாளம் தவிர, தமிழ் ரசிகர்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்றதுல சந்தோஷம். இதுவரைக்கும் தமிழ்ல எந்தப் படமும் பண்ணல. சீக்கிரமே பண்ணுவேன். தமிழ்ல விஜய் சேதுபதி படங்கள் ரொம்பப் பிடிக்கும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News