சினிமா
அரவிந்தசாமி, மதுபாலா, மணிரத்னம்

ரோஜா 2-ம் பாகம் உருவாகிறதா? - மணிரத்னம் தரப்பு விளக்கம்

Published On 2020-06-03 03:51 GMT   |   Update On 2020-06-03 03:51 GMT
ஊரடங்குக்கு பின் ரோஜா படத்தின் 2-ம் பாகத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் 1992-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்தசாமி, மதுபாலா ஜோடியாக நடித்து இருந்தனர். படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை, புது வெள்ளை மழை, காதல் ரோஜாவே, ருக்குமணி ருக்குமணி, தமிழா தமிழா உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இப்படத்தின்முலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த நிலையில் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை மணிரத்னம் தயார் செய்து இருப்பதாகவும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதற்கு இடையில் இதை படமாக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் அரவிந்தசாமி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 



ஆனால் இந்த செய்தியை மணிரத்னம் தரப்பு மறுத்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் அவர்களுடைய கனவுப்படம். அந்தப் படத்துக்கு முன் வேறு எந்த படத்தை அவர் இயக்க திட்டமிடவில்லை. எனக்கூறி அவர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News