சினிமா
லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அள்ளும் - டாக்டர் படக்குழு
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட அப்டேட் லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் ஷுட்டிங் தடைபட்டது. ஊரடங்கு முடிந்த பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த உள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்கள் டாக்டர் படத்தின் அப்டேட் கேட்டு வருவதால், அதற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அப்டேட் கேக்குறது ஈஸி... கொடுக்குறதுதான் கஷ்டம்! லாக்டவுன் முடிந்தால் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க முடியும். லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அள்ளும் பாருங்க" என குறிப்பிட்டுள்ளனர்.
Update kekradhu easy... Kudukradhu than kashtam! 🤗 Waiting for lockdown to be over to resume production & post production of #Doctor & #Ayalaan. Lockdown mudinjadhum, updates allum paarunga 💙
— KJR Studios (@kjr_studios) May 27, 2020
For now, #StayHome#StaySafe and keep watching #Hero on @PrimeVideoIN 😎 https://t.co/mTVULMujJS