சினிமா
சிம்பு, கவுதம் மேனன்

சிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்

Published On 2020-05-26 14:54 GMT   |   Update On 2020-05-26 14:54 GMT
இந்த மாதிரி மீம்ஸ் வரும் என்று சிம்பு அப்பவே சொன்னார் என்று இயக்குனர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.
இயக்குனர் கவுதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் மீண்டும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிம்பு, திரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார்.

'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ளது.



இதுபற்றி இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது "நீ எனக்கு மூன்றாவது குழந்தை என்ற டயலாக்கை சொல்லும் போதே சிம்பு சொல்லிவிட்டார். திரிஷா மடியில் நான் இருக்கும் புகைப்படம் போன்று மீம்ஸ்கள் வரும் என்று.

அதேபோல் இது கள்ளக்காதல்னு நெனச்சா, இது கள்ளக்காதல் தான். ஆனால் எனக்கு அப்படி இல்ல. இது அவங்க அவங்க பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News