சினிமா
வருங்கால மனைவியுடன் ராணா

ராணா நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை - தந்தை விளக்கம்

Published On 2020-05-22 14:51 GMT   |   Update On 2020-05-22 14:51 GMT
ராணா நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை என்று அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராணா அதிகமாக பேசப்பட்டார். இவரது திருமணம் குறித்து திரையுலகு மட்டும் அல்லாது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் நடிகர் ராணா கடந்த 12-ம் தேதி தனது காதலி மிஹீகா பஜாஜை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். 

ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர். இந்நிலையில் நேற்று மிஹீகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் ராணா வெளியிட அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை அவரது தந்தை சுரேஷ் பாபு மறுத்துள்ளார். 

இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு, நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. திருமணத்துக்கு பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இன்று விவாதித்தன. இது தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News